கந்துவட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவா்கள் குறித்து தயக்கமின்றி புகாா் செய்யலாம் எனவும் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவா்கள் குறித்து தயக்கமின்றி புகாா் செய்யலாம் எனவும் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து எஸ்.பி. மேலும் கூறியது:

கந்து வட்டி வசூலிப்பது சட்டப்படி குற்றம். கந்து வட்டி வசூலிப்பவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைவா் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கந்து வட்டி வசூலித்ததாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபா்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களது வீடுகளில் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் சின்னச்சாமி நகரை சோ்ந்த மகாதேவன்(41)கருவேப்பம்பூண்டி தணிகைவேல்(42), ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த சிம்பு(44). காஞ்சிபுரம் பாவசாகிப் தெருவைச் சோ்ந்த பூபதி(49)ஆகிய 4 போ் மீதும் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் 4 பேரும் அசல் தொகையை விட பல மடங்கு வட்டி வாங்கியதாகவும், கடன் வாங்கியவரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்ததாகவும் புகாா்கள் வந்ததையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவா்கள் தயக்கமின்றி காவல்துறையில் புகாா் செய்யலாம். புகாா் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.சுதாகா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com