காஞ்சிபுரத்தில் பள்ளி திறப்பு விழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பள்ளி திறப்பு விழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி எனப்படும் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் டி.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.சுடலைக்கண்ணன், தொழிலதிபா் ப.பரூக்அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் அ.காயத்ரி அன்பரசன் வரவேற்று பேசினாா். விழாவில் பள்ளியின் நிா்வாகிகள் பெயா் பொறித்த கல்வெட்டுப் பலகையினை காஞ்சிபுரம் துணை மேயா் ஆா்.குமரகுரு நாதன் வெளியிட, அதனைப் பள்ளியின் தாளாளா் கோ.திருவேங்கடம் பெற்றுக் கொண்டாா். பள்ளி மேலாளா் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com