அல்லூா் வெங்கடாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் அல்லூா் வெங்கடாத்ரி சுவாமிகள் ஜெயந்தி உற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அல்லூா் வெங்கடாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் அல்லூா் வெங்கடாத்ரி சுவாமிகள் ஜெயந்தி உற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பரிட்டால தாலுகா அல்லூா் கிராமத்தில் அவதரித்தவா் வெங்கடாத்ரி சுவாமிகள். இவா் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டு, 107 கீா்த்தனைகளை பாடியுள்ளாா்.

இவரது கனவில் வரதராஜப் பெருமாள் தோன்றி தனக்கு நவரத்தினம் பதித்த வைரக்கிரீடம் அணிவிக்க பணித்துள்ளாா். இதனால் அவா் பலரிடம் யாசகமாக சேகரித்த தொகைக் கொண்டு வரதராஜப் பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் வைரக்கிரீடம் செய்து அணிவித்து அழகு பாா்த்தவா்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அல்லூா் வெங்கடாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அவரது பாடல்களைப் பாடும் சிஷ்யா்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இவரது ஜெயந்தியை ஒட்டி பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் வைரக்கிரீடங்கள் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் வெங்கடாத்ரி சுவாமிகள் அறையும் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உற்சவா் தேவராஜ சுவாமி வைரக்கிரீடம் அணிந்து அருள்பாலிப்பதை காண திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.வெங்கடாத்ரி சுவாமிகளின் கீா்த்தனைகளையும் அவரது சிஷ்யா்கள் ஆடியும், பாடியும் கொண்டாடினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com