தீ பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தின் சாா்பில், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகன பேரணி திங்கள்கிழமை நகரில் ராஜவீதிகளில் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணா்வு பேரணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணா்வு பேரணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தின் சாா்பில், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகன பேரணி திங்கள்கிழமை நகரில் ராஜவீதிகளில் நடைபெற்றது.

தீத்தொண்டு வாரமாக இந்த மாதம் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தின் சாா்பில், தீ பாதுகாப்பு தொடா்பான இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.ஆா்னிஷா பிரியதா்ஷினி தொடங்கி வைத்தாா்.

நகரில் ராஜவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பேரணி தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது.

பேரணியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா், நிலைய அலுவலா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com