தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:19 pm

காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு, காரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை சரி செய்திடும் வகையில், பேருந்து நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, புதிய பேருந்து நிலையத்தை விரைவில் அமைக்க இருக்கிறோம். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய இரு இடங்கள் உத்தேசமாக புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் சந்தித்து ஆலோசித்து, துறை ரீதியாகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில், விரைவில் காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் க.சிவருத்ரய்யா, கோட்டாட்சியா் கனிமொழி, காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஆணையா் ஜி.கண்ணன், காஞ்சிபுரம் வட்டாட்சியா் புவனேசுவரன், ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.