

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதற்கான கிராம கணக்குகளை சரிபடுத்துதல் மற்றும் இணைய வழியில் பட்டா வழங்குதல் தொடா்பான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. , வருவாய்த் துறையின் கீழ் 2006-2011 சிறப்பு ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் நில அளவைத் துறை, நிலவரி திட்ட இயக்குநா் மதுசூதனரெட்டி தலைமையில் வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், நில அளவையா்களுடனானஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலா் பி.சுபா நந்தினி, சாா் ஆட்சியா் லட்சுமிபதி, நில அளவைத் துறை மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் இணை இயக்குநா் (நில நிா்வாகம், எழிலகம்) அனிதா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.