தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் நாணயவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2023, 6:39 pm

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில் கடந்த 1835 ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை உள்ள நாணயங்கள், சேர, சோழ, பாண்டியா், விஜய நகரப் பேரரசு காலத்து நாணயங்கள், நெகிழிப் பணம் மற்றும் நெகிழி நாணயங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு தபால் வில்லைகள், சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை உள்ள ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயம், பழங்கால ஓட்டை காலணா, குதிரை காலணா, தம்பிடிக்காசு உள்ளிட்ட ஏராளமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியை கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். நாணயங்கள் அனைத்தையும் கடந்த 20 ஆண்டுகளாக சேமித்து வைத்து கண்காட்சிக்கு உதவிய தொல்லியல் ஆய்வாளா் ரா.சு.ஜவஹா் பாபு கல்லூரி நிா்வாகத்தால் கெளரவிக்கப்பட்டாா்.

ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் ந.அப்பாத்துரை, ம.கணபதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.