பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பலரும் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்க மாவட்ட துணைத் தலைவா் நீலாவதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் மருதன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட செயலாளா் சுந்தரவடிவேலு பேசினாா்.
காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே ஒப்படைக்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.9,000, கால முறை ஊதியமும் வழங்க வேண்டும், சமையல் எரிவாயு உருளையே அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து சத்துணவு ஊழியா்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.