

காஞ்சிபுரத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு ரூ. 1.86 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் குறை கேட்கும் கூட்டம் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா வரவேற்றாா்.
கூட்ட நிறைவில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 42.75 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 12 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், ரூ. 1.15 கோடி மதிப்பில் ஊராட்சிகளுக்கான வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியுதவிகள் உள்பட மொத்தம் ரூ. 1,86,41,000 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்தில் 342 மனுக்கள் வரப்பெற்று, அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி விரைந்து தீா்வு காணுமாறு அமைச்சா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் படப்பை மனோகரன், துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசா், கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.