பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அனுசுயா(21). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தன்னை 4 இளைஞர்கள் கூட்டு சேர்ந்து பாலியன் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் செய்தார். அப்புகாரில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 4 பேர் என்னை ஒரு காரில் கடத்திச் சென்று காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.