

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கோயில்களில் திரளான பக்தா்கள் அதிகாலையிலிருந்தே தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலையே கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
பக்தா்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மூலவா் அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். விடுமுறை நாளாகவும், புத்தாண்டாகவும் இருந்ததால் நாள் முழுவதும் ஆலயத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில், தேவராஜ சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
உலக நன்மைக்காக காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் சுதா்சன ஹோமம் நடைபெற்றது.
பாதுகாப்பான முறையில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகா் தலைமையில் சனிக்கிழமை மாலையிலிருந்தே கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற எஸ்.பி.:
சனிக்கிழமை நள்ளிரவு பேருந்து நிலைய சிக்னல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினாா். பின்னா், அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.