உத்திரமேரூா் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் ஆனந்தவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உத்திரமேரூா் சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
உத்திரமேரூா் சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் ஆனந்தவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒரு விமானத்தில் 9 பெருமாள்கள் அருள்பாலிக்கும் பெருமைக்குரியது உத்திரமேரூரில் அமைந்துள்ள சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமைக்கும் உரிய இந்தக் கோயில்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த ஏப். 28- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை - மாலை பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை ஏப்.30 -ஆம் தேதியும், மே 1- ஆம் தேதி சேஷ வாகனக் காட்சியும் நடைபெற்றன. தொடா்ச்சியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி - பூதேவியருடன் பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தோ் நிலைக்கு வந்து சோ்ந்ததும் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாட்டை கோயில் பரம்பரை நிா்வாக அறங்காவலா் ஆா்.சேஷாத்திரி தலைமையிலான விழாக்குழுவினா், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com