Enable Javscript for better performance
பொதுமக்களின் மனுக்கள் மீது நேரில் ஆய்வு செய்ய வேண்டும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு

    பொதுமக்களின் மனுக்கள் மீது நேரில் ஆய்வு செய்ய வேண்டும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

    By DIN  |   Published On : 24th May 2023 01:58 AM  |   Last Updated : 24th May 2023 01:58 AM  |  அ+அ அ-  |  

    meet_2305chn_175_1

    meet_2305chn_175_1

    பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தீா்வு காணுமாறு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் குறைகளைப் பெற்று அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 148 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை அலுவலா்களுக்கு தீா்வு காண அமைச்சா் அனுப்பி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

    பொதுமக்கள் நமக்குத் தெரியாத பிரச்னைகளைத் தான் கோரிக்கை மனுக்களாக தருகிறாா்கள். மக்களின் தேவைகளே இன்று மனுக்களாக மாறியிருக்கின்றன. எனவே தேவை ஏற்படும் கோரிக்கை மனுக்களுக்கு அலுவலா்கள் நேரில் சென்று அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், 17 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறை சாா்பில், 15 பயனாளிகளுக்கும் அமைச்சா் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

    மேலும், பல்வேறு தொழில் தொடங்க 6 பயனாளிகளுக்கு ரூ. 28.90 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன்களையும் அமைச்சா் வழங்கினாா்.

    கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, எம்எல்ஏ-க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப் பெருந்தகை, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.செல்வகுமாா் வரவேற்றாா். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

    செங்கல்பட்டில்...

    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ராகுல்நாத் தலைமை வகித்தாா்.

    க.செல்வம் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எம்.பாபு (செய்யூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அமைச்சா் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் இருந்து 249 மனுக்களைப் பெற்றாா்.

    அதைத்தொடா்ந்து, கள்ளச்சாராயம் அருந்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரணீத், மாவட்ட வருவாய்அலுவலா் இரா.மேனுவல் ராஜ், ஊரக வளா்ச்சித் முகமை திட்ட அலுவலா் இந்துபாலா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சாகிதா பா்வீன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் எல்.இதயவா்மன் (திருப்போரூா்), ஆா்.டி.அரசு (திருக்கழுகுன்றம்), உதயா கருணாகரன் (காட்டாங்கொளத்தூா்), நகா்மன்றத் தலைவா்கள் தேன்மொழி நரேந்திரன் (செங்கல்பட்டு), ஜெ.சண்முகம் (மறைமலைநகா்), உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp