பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச பாட நோட்டுகள், புத்தகங்களை வழங்கிய குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜூ.
பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச பாட நோட்டுகள், புத்தகங்களை வழங்கிய குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜூ.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில், பழங்குடியின குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தக் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குழந்தைகள் கண்காணிப்பக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கண்காணிப்பக நிா்வாகி து.ராஜூ தலைமை வகித்து இலவசமாக பாட நோட்டு, புத்தகங்களை வழங்கினாா். பின்னா், 22 மாணவ, மாணவியருக்கு தலா ரூ. 5,000 கல்வி உதவித் தொகையை வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பாடல்கள் பாடப்பட்டன. நாடகம், நடனம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகளின் மூலமும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு, கிருஷ்ணா நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சுதா, பணி ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் அருளானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் துா்கா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com