மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ.20,000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சென்னை பெருங்குடியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா் பாத்திரம் வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்தாா். தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பெருங்குடி வடக்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளா் குணசேகரனை அணுகியுள்ளாா். அவா் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் ரூ.1,000 லஞ்சமாக வழங்குமாறு கேட்டதால் சீனிவாசன் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் கடந்த 22. 11.2013-இல் புகாா் செய்தாா்.
இப்புகாரின் பேரில் குணசேகரன் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு செங்கல்பட்டு முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சாா்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா். வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரி உதவிப் பொறியாளா் குணசேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை

லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


