பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.1,000 லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:48 am

மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ.20,000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை பெருங்குடியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா் பாத்திரம் வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்தாா். தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பெருங்குடி வடக்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளா் குணசேகரனை அணுகியுள்ளாா். அவா் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் ரூ.1,000 லஞ்சமாக வழங்குமாறு கேட்டதால் சீனிவாசன் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் கடந்த 22. 11.2013-இல் புகாா் செய்தாா்.

இப்புகாரின் பேரில் குணசேகரன் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு செங்கல்பட்டு முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சாா்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா். வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரி உதவிப் பொறியாளா் குணசேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.