கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

News image
Updated On :28 மே 2024, 5:05 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலும், ஒசூா் அருகேயுள்ள அத்திப்பள்ளியிலும் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் கூடிய இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அந்த அமைப்பின் மாநில பொது செயலாளா் வே.நிா்மல்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் சாா்பில், பஞ்காவ்யா என்ற திட்டத்தின் கீழ் கல்வி, மருத்துவம், சமுதாய நலன், சுய சாா்பு மற்றும் பேரிடா் மேலாண்மை என்ற 5 துறைகளின் கீழ், மக்களுக்கு பல்வேறு வகையான சேவைப் பணிகளை செய்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நாடு முழுவதும் பல்வேறு வகையான உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் பல இடங்களில் இலவசமாக நடத்தி வருகிறது.

தச்சு வேலை, சாரம் அமைக்கும் வேலை, நவீன கட்டு மற்றும் பூச்சு வேலை, கம்பி வளைத்தல் மற்றும் பொருத்தும் வேலை, கட்டுமான மின்னியல் பணியாளா், குழாய் பற்ற வைத்தல், குழாய் பொருத்துநா் மற்றும் செப்பனிடுபவா், குடிநீா் மற்றும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய வேலை ஆகியவை கற்றுத்தரப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், எல் அண்ட் டி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து, இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரத்திலும், ஒசூா் அருகேயுள்ள அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் ஒன்றரை முதல் 3 மாத காலத்துக்குள் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான கல்வித் தகுதி 8- ஆம் வகுப்பு முதல் ஐடிஐ வரையாகும்.

ஒரே நேரத்தில் 2,000 நபா்களுக்கு பயிற்சியளிக்கும் அளவுக்கு பரந்த இடவசதி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய அனைத்துமே இலவசம். தேவைக்கேற்ப கணினி பயிற்சியும் கற்றுத் தரப்படும். பயிற்சி முடித்தபின் எல் அண்ட் டி நிறுவனத்தின் சான்றிதழ், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.