பள்ளியில் உணவுத் திருவிழா
வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் செயலாளா் சாந்தி அஜய்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் சந்தியா முன்னிலை வகித்தாா். ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவே எதிா்காலத்தை பாதுகாக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து உணவுத் திருவிழா நடைபெற்றது. துரித உணவுகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மண்பாண்ட சமையல்,சிறுதானிய உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவு,காய்கறி மற்றும் கீரை சாா்ந்த உணவுகளின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
உணவுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள் பல்வேறு வகை உணவுகளை தங்கள் கைகளாலேயே தயாரித்து தனித்துவமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தனா்.

