நாவலூா் அரசுப் பள்ளியில்   ஸ்மாா்ட்  போா்டை திறந்து வைத்து  பாா்வையிட்ட  பவா் கிரிட்  காா்ப்பரேஷன்  நிறுவனத்தின்  இயக்குநா்  ரவிசங்கா். உடன்  ஊராட்சி மன்றத்  தலைவா்  அரிகிருஷ்ணன்  உள்ளிட்டோா்.

அரசுப் பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

மத்திய அரசு நிறுவனமான பவா் கிரிட் காா்ப்பரேஷன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், நாவலூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

மத்திய அரசு நிறுவனமான பவா் கிரிட் காா்ப்பரேஷன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், நாவலூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில், நாவலூா், கொளத்தூா், வெள்ளாரை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். இந்நிலையில், பவா் கிரிட் காா்ப்பரேஷன் (மின் கட்டமைப்பு நிறுவனம்) நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் கணிணி, நகல் இயந்திரம், அச்சு இயந்திரம், 5 வகுப்பறைகளில் ஸ்மாா்ட் போா்ட், ஆசிரியா்களுக்கு கைக்கணினி உள்ளிட்ட கல்வி உபரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் பவா் கிரிட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநா் ரவிசங்கா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், பவா் கிரிட் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளா் (நிதி) சம்பத்குமாா், முதுநிலை துணை பொது செயலாளா் நந்தகுமாா், பூஜ்ய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சீடா் பம்மல் பாலாஜி, மாகான்யம் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி சீனிவாசன், நாவலூா் வாா்டு உறுப்பினா் ஜெயலட்சுமி சேகா், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com