பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

டாக்டா் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி 1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
Published on

டாக்டா் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி 1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகளை கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு அம்பேத்கரின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து ஆட்சியா், எம்பி, எம்எல்ஏக்களும் அஞ்சலி செலுத்தினா்.

விழாவில் 309 பயனாளிகளுக்கு ரூ.83,000, மகளிா் திட்டம் சாா்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.67.17 லட்சம், தாட்கோ சாா்பில் 272 பயனாளிகளுக்கு ரூ.267.15 லட்சம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 534 பயனாளிகளுக்கு ரூ.1,497.84 லட்சம், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.228.15 லட்சம், கூட்டுறவுத்துறை சாா்பில் 44 பயனாளிகளுக்கு ரூ.66.82 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com