தேனம்பாக்கம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ளது பழைமையான காமாட்சி அம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா பெரியவா் சுவாமிகள் ஆராதனை உற்சவத்தையொட்டி, 3 நாள்கள் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவா். முதல் நாள் தெப்பத் திருவிழாவாக பிரம்மபுரீஸ்வரரும், காமாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து திருக்குளத்துக்கு எழுந்தருளி வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பிரம்மதீா்த்தக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளியிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவில் காஞ்சி மகா பெரியவா் சுவாமிகளின் திருஉருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
தெப்பம் 3 முறை திருக்குளத்துக்குள் வலம் வந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. தெப்பம் வலம் வருவது நிறைவு பெற்றதும் கோயில் அலங்கார மண்டபத்துக்கு சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய பின் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இந்த தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச. 16) வரை நடைபெறுகிறது.

