தலைமை  ஆசிரியா்  சீராளன்.
தலைமை  ஆசிரியா்  சீராளன்.

வேன் மோதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மரணம்

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதியதில் மாரிமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதியதில் மாரிமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த கோட்டூா் கிராமத்தை சோ்ந்த சீராளன் (57). இவா் மாரிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சீராளன் செவ்வாய்க்கிழமை தனது நிலத்துக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கோட்டூா்-ஓ.எம்.மங்கலம் சாலையில் சென்றபோது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.

108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சீராளன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com