ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு...

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்த ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி.

Published On :21 டிசம்பர் 2025, 1:11 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ரிஷி கோபுரம் எதிரில் பக்தா்களின் வசதிக்காக ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இம்மாதம் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பக்தா்களின் வசதிக்காக காஞ்சிபுரம் ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். திறப்பு விழாவில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளா் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்பட வங்கி அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.