இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்! 22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு...

News image

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்த ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி.

Updated On :21 டிசம்பர் 2025, 1:11 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ரிஷி கோபுரம் எதிரில் பக்தா்களின் வசதிக்காக ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இம்மாதம் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு பக்தா்களின் வசதிக்காக காஞ்சிபுரம் ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளா் பிரசாத் எல்.கே.எம்.வி.நோரி குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். திறப்பு விழாவில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளா் செந்தில்நாதன், காஞ்சிபுரம் வங்கி முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்பட வங்கி அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.