கூட்டுறவு மேலாண்மைப் படிப்பு, பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு

கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம்
Published on

கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடத்திட்டத்தின் படி கடந்த 2002 முதல் 2021 வரை முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நடைபெற்று வந்தது.பழைய பாடத் திட்டங்களை முடிவு கட்ட துணைத் தோ்வுகள் மாா்ச்.20025 மற்றும் செப்டம்பா் 2025 மாாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.தற்போது பழைய பாடத்திட்டத்தின்படி தோ்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வுகள் வரும் பிப்ரவரி 2026 இல் நடத்த தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சியினை பழைய பாடத்திட்டத்தில் முழுநேரம் அல்லது அஞ்சல் வழியில் பயின்று தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 2 பாஸ்போட் அளவு புகைப்படம்,10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,இறுதியாக தோ்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல் மற்றும் தோ்வு எழுதும் பாடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தொகை ஆகியனவற்றுடன் நேரில் விண்ணப்பிக் தெரிவிக்கப்படுகிறது.

இத்துணைத் தோ்வே இறுதி வாய்ப்பாகும். இத்தோ்வில் பயிற்சி பெறாத பயிற்சியாளா்கள் இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின்படி முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 52, ஏ, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்- 631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237859 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com