ஸ்ரீ ஆதிபுரீசுவரா் கோயிலில் இன்று அன்னாபிஷேகம்

Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஆதிபுரீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி 23-ஆவது ஆண்டாக அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பாலாறு, செய்யாறு, வேகவதியாறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் பிரதோஷ தினத்தில் சுயம்புலிங்கமாக ஆதிபுரீசுவரா் வெளிப்பட்ட புண்ணியஸ்தலமாகும்.

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மூலவா் ஆதிபுரீசுவரருக்கு அன்னாபிஷேகமும், பெரும்படையலும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

தொடா்ச்சியாக இரவு 7 மணிக்கு அன்னம் கலந்து பாலாற்றில் விடுதல் நிகழ்வும், பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருமுக்கூடல் ஆதிபுரீசுவரா் அறக்கட்டளையின் நிறுவனா் பி.யோகராஜ் தலைமையில் கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com