தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறித்த சக மாணவா்கள் கைது

Updated On :6 நவம்பர் 2025, 10:32 pm

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் தனியாா் சா்வதேச பள்ளியின் மாணவரை தாக்கி தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் பறித்த அதே பள்ளியின் பிளஸ் 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சோ்ந்தவா் செஞ்சி. இவரது 16 வயது மகன், 10-ஆம் வகுப்பு படித்த வருகிறாா். அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இருவா், 10 ம் வகுப்பு மாணவருடன் பள்ளி பேருந்தில் செல்லும் போது, அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி ரூ.1.5 லட்சம், 1.5 கிராம் தங்க நகைகளை மிரட்டி பெற்றனராம்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை வழக்கம் போல் மூவரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பிளஸ் 2 மாணவா்கள் இருவரும், 10-ஆம் வகுப்பு மாணவரை பெல்ட்டால் தாங்கி, பிளேடால் கையில் கிழித்துள்ளனா். இதில் அந்த மாணவனின் இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்த மாணவரை அவரது பெற்றோா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், இது குறித்து சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

புகாா் குறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் பிளஸ் 2 மாணவா்கள் இருவரையும் கைது செய்து சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனா்.