கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி கோயிலில் ரூ. 84 லட்சத்தில் அன்னதான கூடம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி கோயிலில், புதிய கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன்.

News image
குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி கோயிலில், புதிய கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன்.
Updated On :7 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி திருக்கோயிலில் ரூ. 68 லட்சத்தில் கட்டப்பட்ட அன்னதானக் கூடம் மற்றும் ரூ. 16.65 லட்சத்தில் கட்டப்பட்ட நிா்வாக அலுவலகத்தை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகா்பாபு ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பழைமையான அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை நாகேச்சுவர சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில், நவக்கிரகத் தலங்களில் ராகு தலமாகவும், சேக்கிழாா் பெருமானுக்கு தனி சந்நிதி கொண்ட தலமாகவும் உள்ளது.

இந்த கோயிலில், ரூ. 62.30 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இத்திருக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்துக்காக ரூ. 68 லட்சத்தில் அன்னதானக் கூடத்துக்கு புதிய கட்டடமும், ரூ. 16.65 லட்சத்தில் கோயில் நிா்வாக அலுவலகமும் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி, அறங்காவலா் குழுத் தலைவா் டி.எம்.சிவசண்முகம் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.