கூட்டுறவு சாா் பதிவாளா்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கருத்தரங்க கூடத்தில் கூட்டுறவு சாா் பதிவாளா்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட 12 மாவட்டங்களில் பணிபுரியும் கூட்டுறவு சாா் பதிவாளா்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து பயிற்சியின் நோக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய வருகை ஆகியவை குறித்து விரிவாக விளக்கினாா்.
பயிற்சி முகாமுக்கு, கூட்டுறவு சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு முன்னிலை வகித்தாா்.
பயிற்சி முகாமில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா், முதன்மை வருவாய் அலுவலா், பொது மேலாளா், பயிற்றுநா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

