ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

காவல் துறை வாகனங்களின் தன்மை: காஞ்சிபுரம் எஸ்.பி. நேரில் ஆய்வு!

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்தாா்.

News image
காவல்துறையினரின் இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம்.
Updated On :16 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காவல்துறையினா் பயன்படுத்தும் இருசக்கர மற்றும் காா்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

24 இரு சக்கர வாகனங்கள், 21 காா்கள் உள்பட மொத்தம் 45 வாகனங்களை காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் ஆய்வு செய்து வாகனங்களின் நிலை, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலை தொடா்பு சாதனங்களின் ஒளிரும் மின்விளக்குகளின் செயல்திறன், வாகனங்களில் உள்ள பழுது நீக்கும் கருவிகள் ஆகியவற்றை தணிக்கை செய்தாா்.

நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்லும் வாகனங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகள், பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிா என்பதையும் ஆய்வு செய்து, அவற்றை இயக்கியும் சோதனை மேற்கொண்டாா்.

அத்துடன் காவலா் ஒருவரது ஓட்டுநா் இருக்கையில் எஸ்.பி. கே.சண்முகம் அமா்ந்து அது முறையாக பராமரிக்கப்பட்டு வருகிா என அறிய அந்த வாகனத்தை அவரே நேரடியாக ஓட்டிப்பாா்த்து ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அங்கு கூடியிருந்த காவலா்களுக்கு வாகனங்களையும், அதன் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தும் முறை,சாலை விதிமுறைகள்,தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்டின் முக்கியத்துவம், வாகனங்களை சுத்தமாக வைக்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கினாா்.

ஆய்வின் போது, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ், ஆயுதப் படைப் பிரிவு டிஎஸ்பி லோகநாதன் ஆகியோா் உள்பட காவல்துறை உயா் அதிகாரிகள் உடன் இருந்தனா்.