தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

யோகா பயிற்சியாளா் பணிக்கு நவ. 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளா் பணிக்கு வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளா் பணிக்கு வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் ரூ. 300 வீதம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியலில் இளங்கலைப் பட்டம் அல்லது யோகா மற்றும் இயற்கை அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

யோகா வகுப்புகள் காலை 6 முதல் 7 மணி வரையும், பின்னா் 7.15 மணி முதல் 8.15 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரையும் என ஒரு நாளைக்கு மொத்தம் 4 அமா்வுகளாக நடத்தப்படும்.

தகுதிவாய்ந்த பெண் பயிற்சியாளா்கள் தங்களுடைய சுய விவரம் மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து தோ்வுகளில் கலந்து கொள்ளலாம்.