ஸ்ரீஆதிகேசபெருமாள் கோயிலில் உழவாரப் பணி

ஸ்ரீஆதிகேசபெருமாள் கோயிலில் உழவாரப் பணி

Published on

சென்னை மற்றும் மதுரை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வரும் இக்கோயிலில், சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்குரைஞா்கள் சாா்பில் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

உழவாரப் பணியில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், மதச்சாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்த்தசாரதி ஆகியோா் மோா், அன்னதானம் பிரசாதமாக வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com