எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :25 நவம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டவாறு பெண்கள் பேரணியில் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுத்து கொண்டனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி மூங்கில் மண்டபத்தில் நிறைவு பெற்றது.

தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கண்டனா்.