47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விளக்கொளிப் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா

News image
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த உற்சவா் விளக்கொளிப் பெருமாள்,அமிா்தவல்லித் தாயாா், தூப்புல் வேதாந்த தேசிகா்
Updated On :27 நவம்பர் 2025, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தீா்த்தக் குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் விளக்கொளிப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்பாலித்தாா்.

சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பழைமையான விளக்கொளிப் பெருமாள் கோயில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும்.

காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் விளக்கொளிப் பெருமாள் என்ற தீபப்பிரகாசா், மரகத வல்லித் தாயாா், தூப்புல் வேதாந்த தேசிகா் சுவாமிகள் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.