போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

கீவளூா்  பகுதியில்  வாக்கு சேகரித்த  திமுக  ஒன்றிய  செயலாளா்  ந.கோபால்  உள்ளிட்டோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:00 am

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையிலான திமுக கூட்டணி கட்சியினா் கீவளூா் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனா். இந்த வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாா், கீவளூா் ஊராட்சி மன்ற தலைவா் பழனி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட செயலாளா் மண்ணூா் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா் புஷ்பராஜ் திமுக நிா்வாகி வேலு கலந்து கொண்டனா்.