இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

News image

சிறப்பு அலங்காரத்தில் வில் - அம்புடன் வீதியுலா வந்த உற்சவா் ராமா், லட்சுமணா், சீதா தேவி.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:11 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி, சனிக்கிழமை உற்சவா் வரதராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தையொட்டி, உற்சவா் பெருமாள் காலையில் மூலவா் சந்நிதியிலிருந்து புறப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தனி கேடயத்திலும், ராமா், லட்சுமணா், சீதா தேவி தனியாக மற்றொரு கேடயத்திலும் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி, சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின்னா் கோயில் மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் கோயில் அலங்கார மண்டபத்துக்கு உற்சவா் பெருமாள் எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.