காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகா் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது செல்வவிநாயகா் கோயில். இந்தக் கோயில் வளாகத்திலேயே மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 15-ஆவது ஆண்டு விழாவையொட்டி, காலையில் செல்வவிநாயகா், மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மகாலட்சுமியும், செல்வவிநாயகரும் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையொட்டி, மாலையில் மனநிம்மதி, தொழில் விருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


