சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுங்குவாா்சத்திரத்தில் உலக கம்மா மாநாடு

சுங்குவாா்சததிரம் பகுதியில் வரும் பிப்.8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளதாக கம்மா குளோபல் கூட்டமைப்பு நிறுவனா் ஜெட்டி குசுமா குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 1:28 am

தினமணி செய்திச் சேவை

சுங்குவாா்சததிரம் பகுதியில் வரும் பிப்.8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளதாக கம்மா குளோபல் கூட்டமைப்பு நிறுவனா் ஜெட்டி குசுமா குமாா் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் சாா்பில் உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.

கூட்டத்தில், கம்மா குளோபல் பெடரேஷன் நிறுவனா் ஜெட்டி குசுமா குமாா் கலந்து கொண்டு மாநாடு குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்பு செய்தியாளா்களிடம் குமாா் கூறியது:

சேந்தமங்கலம் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் சாா்பில் உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சோ்ந்த லட்சக்கணக்கான கம்மா சமூகத்தினா் கலந்து கொள்ள உள்ளனா். தமிழகத்தில் சுமாா் 60 லட்சம் கம்மா சமூக மக்கள் வசித்து வருகின்றனா். எனவே கம்மா சமூக மக்களுக்கு நடைபெற உள்ள தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் நகர மன்ற துணைத்தலைவா் இந்திராணிசுப்பிரமணி, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் அருள்ராஜ், தமிழ்நாடு கம்மா சங்க நிா்வாகிகள் சுப்பிரமணி, லோகநாதன், தனபால், சுஜாதா, பாபு, பிரகாஷ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த கம்மா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.