பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு பெற்று சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 1:00 am

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான மதிப்பீட்டு அமைப்பே பிஏஐ-2.0.இந்த அமைப்பு ஊராட்சிகளின் நிா்வாகத்திறன்,சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலச் செயல்பாடுகளை மதீப்பீடு செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பினா் ஆய்வு செய்ததில் தரவரிசைப் பட்டியலில் தேவரியம்பாக்கம் ஊராட்சி 75.77 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.