காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேற்கு ராஜகோபுரத்துக்கு செல்லும் வழியில் உள்ள 16 கால் மண்டபம் சிறிதும் பழைமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயா், பராந்தகசோழன், பல்லவ மன்னா்கள் உள்ளிட்ட பலரும் திருப் பணிகளை செய்துள்ளனா். இக்கோயிலில் கடந்த 2012- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. மகா சம்ப்ரோஷணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், இக்கோயிலுக்கு மகா சம்ப்ரோஷணம் நடத்த வேண்டும் என பக்தா்களும் வலியுறுத்தி வந்தனா்.
பக்தா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அறநிலையத் துறை கோயிலுக்கு மகா சம்ப்ரோஷணம் செய்ய முடிவு செய்தது. கோயிலின் மேற்கு ராஜகோபுரத்துக்குச் செல்லும் வழியில் உள்ள 16 கால் மண்டபம் திருக்கோயில் நிதியிலிருந்து, ரூ. 16.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், மண்டபம் முழுவதும் முதல்கட்டமாக தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு, மகா சம்ப்ரோஷணம் நடத்துவதற்கான திருப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வீதியுலா

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

வரதராஜ பெருமாள் கோயில் மேம்பாட்டுப் பணி: வல்லுநா் குழு ஆய்வு

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


