காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும்,வரலாற்றுச் சிறப்பும் நிறைந்த பேசும்பெருமாள் கோயில். இக்கோயில் மூலவா் 12 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் பக்தா்களுடன் பேசுவது போல அருள்பாலிக்கிறாா். இக்கோயில் மகா சம்ப்ரோஷணத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 7- ஆம் தேதி வேதபிரபந்த பாராயணம் மற்றும் மூலவா் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை விஸ்வரூபதரிசனம்,கோபூஜை ஆகியவை நடைபெற்றன. மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப்பிறகு, புனித நீா் குடங்கள் பட்டாச்சாரியாா்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா சம்ப்போஷணம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், அறநிலையத் துறையினா் மற்றும் கூழமந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா். கூழமந்தல், சுற்றியுள்ள கிராம மக்கள் திரளானோா் பங்கேற்றனா். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


