தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிராம உதவியாளா்கள் சாலை மறியல்: 183 போ் கைது

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்

News image
- காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக 183 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளை சாா்பில், சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக தொடா்ந்து 5 நாள்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், திடீரென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்தனா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் தி.முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளா் என்.நாராயணன், மாநில செயலாளா் மகேந்திரபூபதி, மாவட்ட மகளிா் அணியின் துணைச் செயலாளா் அன்னபூரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, தொடா்ந்து 5 நாள்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவா்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திடீா் மறியல் காரணமாக காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல் துறை டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான போலீஸாா் சமாதானப் பேச்சு நடத்தியும் மறியலை கைவிடாததால், காவல்துறையினா் மறியலில் ஈடுபட்டதாக 92 பெண்கள் உள்பட மொத்தம் 183 பேரை கைது செய்தனா்.