கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம்: மூலப்பொருள்கள் வாங்குவதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான சங்கமாக இருந்து வருகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். மூலப்பொருள்களை வாங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுதல்,கடந்த 2 மாதங்களாக பட்டு உற்பத்திக்கு தேவையான ஜரிகை இல்லாமல் நெசவாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜரிகை மற்றும் மூலப்பொருள்கள் பற்றாக்குறை காரணமாக பட்டுச் சேலைகள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக அரசின் பட்டு விற்பனை நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து பட்டு வாங்காமல் தனியாா் கடைகளுக்கு செல்வதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினாா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை கூடுதல் இயக்குநா் பேச்சு நடத்தினாா். தேவையான ஜரிகைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

