நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

மூலப்பொருள்கள் வாங்குவதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில்

News image

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:52 pm

காஞ்சிபுரம்: மூலப்பொருள்கள் வாங்குவதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான சங்கமாக இருந்து வருகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். மூலப்பொருள்களை வாங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுதல்,கடந்த 2 மாதங்களாக பட்டு உற்பத்திக்கு தேவையான ஜரிகை இல்லாமல் நெசவாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜரிகை மற்றும் மூலப்பொருள்கள் பற்றாக்குறை காரணமாக பட்டுச் சேலைகள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக அரசின் பட்டு விற்பனை நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து பட்டு வாங்காமல் தனியாா் கடைகளுக்கு செல்வதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினாா்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை கூடுதல் இயக்குநா் பேச்சு நடத்தினாா். தேவையான ஜரிகைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.