மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.34.13 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு

நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.34.13 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

News image
மரக்கன்றுகள்  நட்ட  ஊராட்சி மன்றத்  தலைவா்  வெள்ளாரை அரிகிருஷ்ணன்  உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.34.13 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக கனிமவள நிதியின் கீழ் ரூ.34.13 லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு, 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி, புதிய பைப் குழாய் இணைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு நீா்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் பரமசிவன், வாா்டு உறுப்பினா் பாத்திமா மணிகண்டன், திமுக நிா்வாகிகள் உலகநாதன், கெங்காதரன், சீனிவாசன், ரவி, செல்வகண்ணன், ரமேஷ், பிரபு, தங்கபாண்டி, கணேசன் கலந்து கொண்டனா்.