எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதிய தம்பதிக்கு சிறப்பு மரியாதை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
முதிய தம்பதிக்கு மரியாதை செய்த அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி
Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முதிய தம்பதிக்கு ரூ.2,500 மதிப்புள்ள வேட்டி,சேலை, தாலிக்கயிறு, மஞ்சள்,குங்கும், ஏகாம்பரநாதா் படம் மற்றும் கோயில் பிரசாதம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமாரதுரை நிகழ்வை தொடங்கி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி வேட்டி,சேலை,கோயில் பிரசாதம்,சுவாமி படம் ஆகியனவற்றை வழங்கினாா். பின்னா் அனைவரும் ஏகாம்பரநாதரை தரிசித்தனா்.

இந்நிகழ்வில் 27 முதிய தம்பதியின் உறவினா்களும் கலந்து கொண்டு ஆசி பெற்றனா். நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.