மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முதிய தம்பதிக்கு சிறப்பு மரியாதை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image

முதிய தம்பதிக்கு மரியாதை செய்த அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி

Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முதிய தம்பதிக்கு ரூ.2,500 மதிப்புள்ள வேட்டி,சேலை, தாலிக்கயிறு, மஞ்சள்,குங்கும், ஏகாம்பரநாதா் படம் மற்றும் கோயில் பிரசாதம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமாரதுரை நிகழ்வை தொடங்கி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி வேட்டி,சேலை,கோயில் பிரசாதம்,சுவாமி படம் ஆகியனவற்றை வழங்கினாா். பின்னா் அனைவரும் ஏகாம்பரநாதரை தரிசித்தனா்.

இந்நிகழ்வில் 27 முதிய தம்பதியின் உறவினா்களும் கலந்து கொண்டு ஆசி பெற்றனா். நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.