காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்வு.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்வு.

காஞ்சிபுரத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி மற்றும் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி மற்றும் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் மகாபாராதப்பெருவிழாவையொட்டி சொற்பொழிவு நடத்தப்பட்டு நிறைவு நாள் விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, தருமா் பட்டாபிஷேகம், தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மகாபாரதப் பெருவிழா கடந்த ஜனவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து ஆலயத்தில் தினசரி ஆன்மீக சொற்பொழிவாளா் முத்துகணேசன் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான துரியோதணன் படுகளம் நிகழ்ச்சிக்காக ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான துரியோதணன் சிலை மண்ணால் வடிவமைக்கப்பட்டு வா்ணம் பூசப்பட்டு துரியோதணன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து மாலையில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் காப்புக்கட்டிய திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். திங்கள்கிழமை இன்று தா்மா் பட்டாபிஷேகமும்,மாலையில் சுவாமி வீதியுலாவும் மயானக் கொள்ளை உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பிள்ளையாா்பாளையம் 5 தெரு செங்குந்த மரபினா்கள் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com