மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிவில் மகா சிவராத்திரி

சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

சந்தவேலூரில் வாகனங்களில்  தொங்கியபடி  நோ்த்திக்கடன்  செலுத்திய  பக்தா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 6:58 pm

சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், 45-ஆவது ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மூலவா் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்று மலா் மற்றும் பழங்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு சுந்தரேஸ்வரரை வணங்கி சென்றனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கிராம தா்மகா்த்தா எஸ்.பி.பாலமுருகன் தலைமையிலும், கிராம நாட்டாண்மைதாரா் என்.சங்கா் முன்னிலையில் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடியும் கிராம முழுவதும்ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உற்சவா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருவீதிஉலாவும் நடைபெற்றது. இதில் சந்தவேலூா் ஒன்றியகுழு உறுப்பினா் உஷா கோதண்டன், ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி, துணைத்தலைவா் மகாலட்சுமி ஜெயக்குமாா் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.