மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கருணை அடிப்படையில் பணி ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது,

News image

பயனாளிக்கு பணியாணை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :18 பிப்ரவரி 2026, 12:33 am

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, கருணை அடிப்படையில் இருவருக்கு பணி ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 515 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசுன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கருணை அடிப்படையில் பா.ஜெயந்தி என்பவருக்கு ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலா் பணிக்கும், சிவமதி என்பவருக்கு ஐயங்காா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளா் பணிக்ரான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக 112 முஸ்லிம் மகளிருக்கு ரூ.20.15 லட்சத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்க கடனுதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.