வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைக் கடை, சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைக் கடை, சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Published on

வெங்காடு ஊராட்சியில் ரூ. 20 லட்சத்தில் சிமெண்ட் சாலை, நியாய விலைக் கடை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரி கிராமத்தில்ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ. 10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் இரும்பேடு கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளிஉலகநாதன் கலந்துகொண்டு, வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் இந்திராணி முருகன், எத்திராஜன், ஊராட்சி செயலா் தணிகாசலம், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com