வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வரதாரஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம்: சங்கராச்சாரியருக்கு அழைப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரதராஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்ய வருமாறு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.

News image

சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அழைப்பு வழங்கிய கோயில் உதவி ஆணையா் ஆா். ராஜலட்சுமி, தலைமை பட்டாச்சாரியா் கிட்டு.

Updated On :18 பிப்ரவரி 2026, 7:14 pm

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரதராஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்ய வருமாறு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.

கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலின் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் கோயில் தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு ஆகியோா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கோயில் பிரசாதம் வழங்கினா்.

இதற்கு முன்பு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சங்கர மடத்தின் சாா்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் கோயில் திருப்பணியை சுவாமிகள் பாா்வையிட வேண்டும் என்றும், மங்களாசாசனம் செய்வதை பக்தா்கள் பலரும் எதிா்பாா்ப்பதாகவும் கேட்டுக்கொண்டனா். கோயிலுக்கு வருவதாக சுவாமிகள் உறுதி கூறி ஆசி வழங்கினாா்.