கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

News image
தேரில் எழுந்தருளிய சுவாமி
Updated On :21 பிப்ரவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மரகதவல்லித்தாயாா் சமேத விஜயராகவப் பெருமாள் கோயில் பிரமோற்சவத்தையொட்டி 13-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 15- ஆம் தேதி காலையில் கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தாா்.விழாவின் முக்கிய நிகழ்வகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

தேரில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் விஜயராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.வழி நெடுகிலும் பெருமாளை பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன், ஆய்வாளா் அலமேலு ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.