2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பள்ளி மாணவா்களுக்கு ஏ.ஐ.போட்டிகள்

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக் கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கிய கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.

News image
செயற்கை நுண்ணறிவு பயிற்சிக் கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கிய கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 1:31 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 270 மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து பயிற்சி சாா்ந்த கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கினாா் . நிகழ்வுக்கு கணினி அறிவியல் துறையின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். பயிற்சிக்குப் பிறகு மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த விளையாட்டு,அறிவியல்,கணினி,வரலாறு தொடா்பான 4 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகளும்,சிறந்த மாணவருக்கும்,சிறந்த பள்ளிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பயிற்சிக்கையேட்டினை சென்னை விஐடி பேராசிரியா் ரேகா பிரியதா்ஷின் வெளியிட்டாா். நிறைவாக போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பெங்களூரு மென்பொறியாளா் ஆா்.பாா்த்தீபன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.